உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே 12-ம் வகுப்பு மாணவி கடத்தல்

Published On 2022-07-30 08:24 GMT   |   Update On 2022-07-30 08:24 GMT
  • கடலூர் அருகே 12-ம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டுள்ளார்.
  • சம்பவத்தன்று மாணவி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் மாணவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

கடலூர்:

கடலூர் அருகே குள்ளஞ்சாவடியை சேர்ந்த 17 வயது மாணவி 12 ஆம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று மாணவி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் மாணவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் பெற்றோர் கொடுத்த புகாரில், சமிட்டிக்குப்பம் சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு எனது மகளை பெண் கேட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வெளியில் சென்ற எனது மகளை சுரேஷ் கடத்தி சென்று இருக்கலாம் என புகார் அளித்ததன் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News