உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே பாம்பு கடித்து பெண் சாவு

Published On 2022-07-20 14:38 IST   |   Update On 2022-07-20 14:38:00 IST
  • சம்பவத்தன்று ஜெயந்தியை பாம்பு கடித்துவிட்டது.
  • அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள இஞ்சிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணன். விவசாயி. இவரது மனைவி ஜெயந்தி (வயது 44). சம்பவத்தன்று ஜெயந்தியை பாம்பு கடித்துவிட்டது. அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து சரவணன் தந்த புகாரின் பேரில் போச்சம்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News