சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் காற்றாலை ரெக்கையுடன் சென்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
- காற்றாலை விசிறியின் இறக்கைகளை அதிக நீளமான 6-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றிக்கொண்டு சென்றது.
- போலீஸ் செக்போஸ்ட் எதிரே ஒன்றன் பின் ஒன்றாக 6 லாரிகளில் காற்றாலை விசிறி இறக்கைகளை கொண்டு சென்றனர்.
பரமத்தி வேலூர்:
சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரு பகுதியில் இருந்து மதுரை பகுதிக்கு சுமார் 360 அடி நீளத்தில் காற்றாலை விசிறியின் இறக்கைகளை அதிக நீளமான 6-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி க்கொண்டு சென்றது. போலீஸ் செக்போஸ்ட் எதிரே ஒன்றன் பின் ஒன்றாக 6 லாரிகளில் காற்றாலை விசிறி இறக்கைகளை கொண்டு சென்றனர்.
அதன் காரணமாக மிகவும் நீளமான இறக்கைகளை லாரிகளில் கொண்டு செல்வதால் அந்த லாரிக்கு பின்னால் வரிசையாக காவிரியாற்று பாலத்தின் வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், கார்கள், வேன்கள் இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நீண்ட நேரத்திற்கு பிறகு காற்றாலை விசிறி இறக்கைகளை கொண்டு சென்ற லாரிகள் மிகவும் மெதுவாக ஒன்றன்பின் ஒன்றாக தவிட்டுப்பாளையம் மேம்ப்பாலத்தின் வழியாக சென்றது. இதனால் பரமத்தி வேலூர் போலீஸ் செக் போஸ்ட் முதல் காவிரி ஆற்று பாலம் அருகே மேம்பாலம் வரை ஏராளமான வாகனங்கள் இறக்கைகளை ஏற்றி செல்லும் லாரியின் பின்னால் அணிவகுத்து சென்றன. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் காற்றாலை விசிறி ரெக்கைகளை கொண்டு செல்லும் லாரிகள் இரவு முழுவதும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் நிறுத்தி வைத்துவிட்டு மறுநாள் பகல் 12 மணிக்கு மேல் இந்த சாலை வழியாக செல்கின்றன.
பகல் நேரங்களில் இந்த வாகனங்கள் செல்வதால் அடிக்கடி தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே காற்றாலை விசிறி இறக்கைகளை கொண்டு செல்லும் லாரிகளை இரவு 10 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.