உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-09-09 15:07 IST   |   Update On 2023-09-09 15:07:00 IST
  • நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
  • ஆர்ப்பாட்டத்தில் 2002-ம் ஆண்டு 41 மாத பணி நீக்ககாலத்தை ஓய்வூதியத்திற்கு பொறுந்தும் வகையில் முறைப்படுத்த வேண்டும்.

நாமக்கல்:

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. நாமக்கல் மாவட்ட தலைவர் செந்தில் குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தங்கவேல் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 2002-ம் ஆண்டு 41 மாத பணி நீக்ககாலத்தை ஓய்வூதியத்திற்கு பொறுந்தும் வகையில் முறைப்படுத்த வேண்டும்.இறந்த சாலை பணியாளர்களுக்கு விதிமுறையை தளர்த்தி வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News