உள்ளூர் செய்திகள்

சேந்தமங்கலம் அருகே வாரச்சந்தையில் ரூ.15 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

Published On 2023-06-13 09:39 GMT   |   Update On 2023-06-13 09:39 GMT
  • நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பவித்திரத்தில் திங்கள்தோறும் வாரச்சந்தை கூடுகிறது.
  • அதிகாலை, 5 மணிக்கு துவங்கும் இந்த சந்தை இரவு 8 மணி வரை நடக்கிறது.

சேந்தமங்கலம்:

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பவித்திரத்தில் திங்கள்தோறும் வாரச்சந்தை கூடுகிறது. இங்கு, கோம்பை, அப்பாயிபாளையம், வரகூர், பண்ணைகாரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் வெள்ளாடு, செம்மறி ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதிகாலை, 5 மணிக்கு துவங்கும் இந்த சந்தை இரவு 8 மணி வரை நடக்கிறது.

துறையூர், திருச்சி, கொளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் செல்கி ன்றனர். நேற்று நடந்த வாரச்சந்தைக்கு, பல்வேறு கிராமங்களில் இருந்து ஆடுகள் வரத்து அதிகரித் திருந்தது. இதனால் ஒரே நாளில், 15 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News