உள்ளூர் செய்திகள்

தீ விபத்தில் வீட்டின் மேற்கூரை சேதம் அடைந்திருப்பதை படத்தில் காணலாம்.

வேலகவுண்டம்பட்டி அருகே குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து

Published On 2023-06-19 07:25 GMT   |   Update On 2023-06-19 07:25 GMT
  • கருப்புசாமி(வயது 40). இவர் சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள ஒரு கல்கு வாரியில் வேலை செய்து வருகிறார்.
  • அடுப்பில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் தீப்பிடித்து வீட்டின் மேற்கூரையில் பற்றி எரிந்தது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள செங்கரப் பாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி(வயது 40). இவர் சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள ஒரு கல்கு வாரியில் வேலை செய்து வருகிறார்.

இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கெங்காரப் பாளையத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஏரிக்கு சென்று மீன்களை பிடித்து வந்துள்ளார். பின்னர் ஏரியில் பிடித்து வந்த மீன்களை பொறிக்க வேண்டி அடுப்பை பற்ற வைத்து எண்ணெயை ஊற்றி வைத்துவிட்டு மறந்து வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்பொழுது அடுப்பில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் தீப்பிடித்து வீட்டின் மேற்கூரையில் பற்றி எரிந்தது.இது குறித்து அங்கிருந்தவர்கள் நாமக்கல் தீயணைப்புத் துறையின ருக்கு தகவல் தெரிவித்துள் ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வேகமாக எழுந்து கொண் டிருந்த தீயை தண்ணீர் பீச்சி அடித்து அணைத்து தீ அருகில் உள்ள வீடுகளுக்கு மேலும் பரவாமல் தடுத்தனர்.

இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. அதிஷ்டவசமாக உயிர் சேதம் மற்றும் பொருட்கள் சேதமடையாமல் தடுக்கப்பட்டது.சம்பவம் குறித்து வேலகவுண் டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News