உள்ளூர் செய்திகள்

நாமக்கல் கல்லூரி மாணவியிடம் ஆன்லைனில் ரூ.1.20 லட்சம் மோசடி

Published On 2023-04-15 14:53 IST   |   Update On 2023-04-15 14:53:00 IST
  • நாமக்கல் கல்லூரி மாணவியிடம் ஆன்லைனில் வேலை கிடைத்து விட்டதாக தகவல் வந்தது.
  • ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரை, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார்.

நாமக்கல்:

நாமக்கல் நகரைச் சேர்ந்த வர் சாகுல்அமீது. இவரது மகள் ஷெலிகா பேகம் (வயது 20), என்ஜினீயரிங் கல்லூரி யில் படித்து வருகிறார்.

இவர் இன்டர்நெட் மூலம் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடி வந்தார். சில நாட்களில் அவருக்கு ஆன்லைனில் வேலை கிடைத்து விட்டதாக தகவல் வந்தது. மேலும் அவர்கள் ஒரு வெப்சைட்டிற்கான லிங்க்கை அனுப்பி வைத்த னர்.

அந்த லிங்க்கில் கொடுக்கப்படும் டாஸ்க் மூலம் பணியை தொடர வேண்டும் என தெரி விக்கப்பட்டது. முதலில் டாஸ்கை செய்ய குறைந்த பட்ச தொகை டெபாசிட் செலுத்த வேண்டும் என அறிவிப்பு வந்தது. அந்த தொகையை செலுத்தி பணியை தொடர்ந்தார்.

இவ்வாறு 18 தவணைக ளாக சிறிய, சிறிய தொகையாக ஷெலிகா பேகம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரை, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் பணியை தொடர மேலும் கூடுதலாக பணம் அனுப்ப வேண்டும் என தகவல் வந்தது. இதனால் சந்தேகப்பட்ட ஷெலிகா பேகம், தன்னிடம் இனி அனுப்புவதற்கு பணம் இல்லை, எனக்கு வேலை வேண்டாம், இதுவரை நான் அனுப்பிய பணத்தை திருப்பி அனுப்புங்கள் என கேட்டு உள்ளார்.

அதற்கு அவர்கள் எவ்வித பதிலும் தரவில்லை. மேலும் செல்போன் மூலமும் அவர்களை தொடர்பு கொள்ள முடிய வில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஷெலிகா பேகம் இது குறித்து, நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பே ரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News