உள்ளூர் செய்திகள்

மகாத்மா காந்தி, பிரபாகரன், சீமான் படத்துடன் ரூபாய் நோட்டு வடிவில் நாம் தமிழர் கட்சியினர் நூதன பிரச்சாரம்

Published On 2023-02-06 15:11 GMT   |   Update On 2023-02-06 15:11 GMT
  • கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
  • ஓட்டுக்கு பணம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்தி ரூபாய் நோட்டு வடிவிலான விழிப்புணர்வு பிரசுரங்களை பிரச்சாரத்தின் போது பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ், அ.தி.மு.க, அ.ம.மு.க, தே.மு.தி.க உள்பட பல்வேறு கட்சிகள், சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர்.

இதேபோல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று நாம் தமிழர் கட்சியினர் அக்ரஹாரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது நூதனமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அதாவது ஓட்டுக்கு பணம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்தி ரூபாய் நோட்டு வடிவிலான விழிப்புணர்வு பிரசுரங்களை பிரச்சாரத்தின் போது அக்கட்சியினர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.

அந்த ரூபாய் நோட்டு பிரசுரத்தில் மகாத்மா காந்தி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், சீமான் படங்கள் இடம் பெற்றுள்ளன. லஞ்சம் தவிர், லஞ்சம் தராமல் நெஞ்சம் நிமிர் போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

Tags:    

Similar News