உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் முஸ்லிம்கள் சாலை மறியல்
- கோவை - திருச்சி மெயின் ரோட்டில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
- பல்லடம் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
பல்லடம் :
திருப்பூர் பகுதியில் உள்ள பள்ளிவாசலை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் நால் ரோட்டில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் கோவை திருச்சி மெயின் ரோட்டில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.