உள்ளூர் செய்திகள்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அனைத்து இந்து அமைப்புகளைசேர்ந்தவர்கள் கலந்து கொண்டஆலோசனைக் கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

பண்ருட்டியில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது

Published On 2023-07-07 07:33 GMT   |   Update On 2023-07-07 07:33 GMT
  • ராஜதுரை ( வயது 34 ) என்பவரை கைது செய்து விசாரித்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
  • 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படு த்தப்பட்டது.

கடலூர்:

பண்ருட்டி அடுத்த வரிசாங்குப்பம்ரங்கநாதன்எமகன்செல்வன். இவர் கடந்த 30-ந் தேதி பண்ருட்டி 4 முனை சந்திப்பு அருகே உள்ள காய்கறி கடையில் காய்கறி வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு காய்கறி வாங்கிவிட்டு திரும்பி வந்து பார்க்கும்போது தனது மோட்டார் சைக்கிள் திருடு போனது தெரியவந்தது. இது சம்பந்தமாக பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் செல்வம் அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் தங்கவேல் மற்றும் போலீசார் ஆனந்த், ராஜி, அன்பரசன், கணேசமூர்த்தி, ஹரிஹரன் ஆகியோர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. யை ஆய்வு செய்து கொட்டிகோனா ன்குப்பத்தை சேர்ந்த பரமசிவன் மகன் ராஜதுரை ( வயது 34 ) என்பவரை கைது செய்து விசாரித்து அவரிடம் இருந்து திருட்டு போன மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் குறிஞ்சிப்பாடி மாரிய ம்மன் கோவில் அருகே 2 மோட்டார் சைக்கிள் திருடியதையும் ஒப்புக்கொண்டார்.அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படு த்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

Tags:    

Similar News