உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே மொபட் கவிழ்ந்து இளம்பெண் பலி

Published On 2023-07-02 14:29 IST   |   Update On 2023-07-02 14:29:00 IST
  • காந்திமதி மருத்துவமனைக்கு நேற்று மொபட்டில் சென்றுள்ளார்.
  • விபத்தில் தூக்கி வீசப்பட்ட காந்திமதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

நெல்லை:

நெல்லை டவுண் மகிழ்வண்ணநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது மகள் காந்திமதி (வயது 33). இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு மருத்துவ மனைக்கு நேற்று மொபட்டில் சென்றுள்ளார். பின்னர் மருத்துவரை பார்த்துவிட்டு மாலையில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

நிலை தடுமாறி...

சீதபற்பநல்லூர் அருகே உகந்தான்பட்டி விலக்கு பகுதியில் வந்துள்ளார். அப்பகுதியில் நான்கு வழிச்சாலை பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தை அவர் கவனிக்கவில்லை. இதனால் மொபட் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட காந்திமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த சீதபற்பநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காந்திமதி உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News