உள்ளூர் செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புதிய கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து இனிப்பு வழங்கினார். 

ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம்

Published On 2022-10-07 07:31 GMT   |   Update On 2022-10-07 07:31 GMT
  • திருமங்கலம் அருகே கிராம நிர்வாக அலுவலகம் ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்டது.
  • இந்த அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் திறந்து வைத்தார்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ உரப்பனூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவல கட்டிடம் மிகவும் சேதமடைந்து இருந்தது.

எனவே புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று புதிதாக ரூ.15 லட்சம் செலவில் கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான

ஆர்.பி. உதயகுமார் திறந்து வைத்தார்.

முன்னதாக அவருக்கு கட்சி நிர்வாகி மாலையணிவிக்க வந்தனர். அந்த மாலையை வாங்கி அவர் அந்த பகுதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவருக்கு அணிவித்தார். இதற்கிடையே திருமங்கலம் தொகுதி கீழவரப்பனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப்ள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளிக்கட்டிடமும் தற்போது இடிக்கப்பட்டு அப்புறப்படு த்தப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்கட்டிடம் இல்லாததால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாக பள்ளி ஆசிரியர்கள் முன்னாள் அமைச்சர்

ஆர்.பி. உதயகுமாரிடம் மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்தது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து சிறப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளி கட்டிடம் கட்டித் தரப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்பழகன், பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், சிவசுப்பிரமணியன், மீனவரணி மாவட்ட செயலாளர் சரவண பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சுமதி, சாமிநாதன், பேரவை நகர செயலாளர் பாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News