உள்ளூர் செய்திகள்
- படைப்பாற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சிமுகாம் நடந்தது.
- செயலாளர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி பொட்டுலுப்பட்டியில் அரசு உதவிபெறும் காந்திஜி ஆரம்பபள்ளியில் நிறுவனர் பொன்னு தாய்அம்மாள் நினைவு தினத்தையொட்டி படைப்பாற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சிமுகாம் நடந்தது.
செயலாளர் நாகேஸ் வரன் தலைமை தாங்கினார். பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் பொறியாளர் தன பாலன் முன்னிலை வகித் தார். தலைமைஆசிரியர் வெங்கடலட்சுமி வரவேற் றார்.
முகாமில் மாணவ-மாணவி களுக்கு விஜய லட்சுமி கோகுல கிருஷ்ணன் யோகாவும் நாடகஆசிரியர் செல்வம் நாடகபயிற்சி மற்றும் நடிப்பு, பொம்ம லாட்டம், கைவிளைபொருள் தயாரித்தல் உள்ளிட்ட தனித்திறன்மேம்பாட்டு பயிற்சியளிக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் ஆசீர் வாதம் பீட்டர், எஸ்தர் டார்த்தி, சுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.