உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவுக்கு சென்று திரும்பிய பெண் பரிதாப சாவு

Published On 2023-07-06 13:49 IST   |   Update On 2023-07-06 13:49:00 IST
  • கோவில் திருவிழாவுக்கு சென்று திரும்பிய பெண் பரிதாப சாவு
  • கோவில் திருவிழாவுக்கு சென்று திரும்பிய பெண் பரிதாபமாக இறந்தார்.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே–யுள்ள பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி விஜய–லட்சுமி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

இதற்கிடையே சாத்தங் குடி பகுதியில் உள்ள சூராயி அம்மன் கோவில் திருவிழா–வுக்கு பாலமுருகனின் தாய் அழகம்மாள் மகள்கள் அபிநயா, நாகலட்சுமி, அக்காள் மகன் சின்னமருது ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

பின்னர் திருவிழாவை முடித்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் 4 பேரும் புறப்பட்டனர். வழி–யில் சிவரக்கோட்டை அருகே திடீரென்று கட்டுப் பாட்டை இழந்து தாறுமா–றாக ஓடிய இருசக்கர வா–கனம் சென்டர் மீடியனில் வேகமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனை–யில் அனுமதிக்கப்பட்ட அபி–நயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீ–சார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகி–றார்கள்.

Tags:    

Similar News