உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

Published On 2022-07-05 09:36 GMT   |   Update On 2022-07-05 09:36 GMT
  • மதுரை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • குழந்தை இல்லாததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

மதுரை

மதுரை ராயப்பா நகரை சேர்ந்தவர் நிரஞ்சன் (வயது 32). இவரது மனைவி மல்லிகா.

இவர்களுக்கு குழந்தை இல்லை. எனவே குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிரஞ்சன் நேற்று திருப்பரங்குன்றம்- விளாச்சேரி ரோட்டில் உள்ள தென்னந்தோப்பு அருகே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரி சோத னைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News