உள்ளூர் செய்திகள்

தொழில் அதிபர் காரில் பணம் திருட்டு

Published On 2023-05-30 08:04 GMT   |   Update On 2023-05-30 08:04 GMT
  • தொழில் அதிபர் காரில் ரூ. 3.75 லட்சம் திருடப்பட்டது.
  • திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை

திருநகர் சொக்கநாதர் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது46).இவர் சிலைமான் பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

இவர் காரில் மதுரைக்கு வந்தார். அதில் தொழிற்சா லைக்கு தேவை யான உபகரணங்களை வாங்கு வதற்காக ரூ 3 லட்சத்து 75 ஆயிரத்தை வைத்திருந்தார்.

விரகனூர்-திருப்புவனம் செல்லும் வழியில் காரை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது காரில் இருந்தபணம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

மதுரை கண்ணனேந்தல் ஜி.ஆர்.நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் மதிமாறன் (46). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார்.

அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் பீரோவில் இருந்த ¾ பவுன் நகை மற்றும் ரூ.99 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News