உள்ளூர் செய்திகள்
பாலியல் துன்புறுத்தல்: பெண்கள் அமைப்பு கண்டனம்
- பாலியல் துன்புறுத்தல்: பெண்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்தது.
- மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் மற்றும் தற்கொலை மரணங்கள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்க வேண்டும்.
மதுரை
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட அலுவலகத்தில், பெண்கள் இந்தியா அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
புதிய நிர்வாகிகளாக தலைவர் கதீஜா, பொதுச்செயலாளர் சையது அலி பாத்திமா, பொருளாளர் கனகவள்ளி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் மற்றும் தற்கொலை மரணங்கள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்க வேண்டும், சமையல் எரிவாயுக்கான கூடுதல் வரியை ரத்து செய்து, விலை குறைப்பு செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.