உள்ளூர் செய்திகள்

தனியார் வேலை வாய்ப்பு முகாம்

Published On 2022-07-21 07:30 GMT   |   Update On 2022-07-21 07:30 GMT
  • மதுரையில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
  • இதில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வி தகுதிக்கேற்ப இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளன.

மதுரை

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் 2-வது, 4-வது வெள்ளிக் கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது. அதன்படி மதுரையில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இதில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வி தகுதிக்கேற்ப இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளன. 10-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் மற்றும் ஐ.டி.ஐ, சுருக்கெழுத்து, தட்டச்சர், டிப்ளமோ நர்சிங், பிசியோதெரபி முடித்தவர்கள் முகாமில் பங்கேற்கலாம்.

இதற்காக அவர்கள் மற்றும் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் (http://www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் சுயவிவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் கல்விச்சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் வருகிற 22-ந் தேதி காலை 10 மணிக்கு, கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து கலந்து கொள்ளலாம்.

தனியார் நிறுவனங்களில் பணி பெறுவதால், வேலை வாய்ப்பு அலுவலகப்பதிவு எந்த வகையிலும் பாதிக்கப்படாது.

மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News