உள்ளூர் செய்திகள்

இறந்த பெண் குழந்ைத.

பெண் குழந்தை சாவில் மர்மம்; பெற்றோரிடம் விசாரணை

Published On 2023-05-03 07:40 GMT   |   Update On 2023-05-03 07:40 GMT
  • உசிலம்பட்டி அருகே பெண் குழந்தை சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
  • அந்த குழந்தை இறந்தது எப்படி? என்பது தொடர்பாக பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மதுரை

மதுரை மாவட்டம் எழுமலை போலீஸ் சரகம் உசிலம்பட்டி அருகே உள்ள ஜோதில்நாயக்கனூர் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி வாசுகி (வயது21). இவர்கள் சென்னை படப்பையில் முறுக்கு வியாபாரம் செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு 2வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் மீண்டும் வாசுகி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாகிய வாசுகியை பிரசவத்திற்காக கடந்த 26-ந்தேதி உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், அங்கு அவருக்கு கப்பிரசவத்தில் மீண்டும் பெண் குழந்தையே பிறந்தது. தாயும்-சேயும் உடல் நலத்துடன் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று பகலில் அந்த பெண் குழந்தைக்கு பால் கொடுக்கும்போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குழந்தையை உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என தெரிவித்தனர். மேலும் அந்த குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

பிறந்த சில நாட்களிலேயே பச்சிளம் பெண் குழந்தை இறந்தது தொடர்பாக எழுமலை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து பெண் குழந்தை இறந்தது எப்படி? என்பது தொடர்பாக பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News