உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் வழங்கினார்.

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

Published On 2022-08-25 07:50 GMT   |   Update On 2022-08-25 07:50 GMT
  • மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி நகர் மன்ற தலைவர் வழங்கினார்.
  • அரசு மேல்நிலைப்பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திரும ங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் படிக்கும் 100 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் கலந்து கொண்டு 100 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி பேசினார்.

அப்போது அரசு மேல்நிலைப்பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நகர்மன்றத் துணைத் தலைவர் ஆதவன் அதியமான், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முத்துக்குமார், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், சங்கீதா, முருகன், சரண்யா, ரவி மற்றும் தலைமை ஆசிரியர் பாஸ்கரன்,ஆசிரியர்-ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News