உள்ளூர் செய்திகள்

பெண் பலாத்காரம்; 2 பேருக்கு வலைவீச்சு

Published On 2022-10-30 13:33 IST   |   Update On 2022-10-30 13:33:00 IST
  • பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
  • கடத்தி சென்று பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

மதுரை

திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டியை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் சத்திரப்பட்டி தேவாலயத்தில் வழிபாடு செய்வதற்காக மதுரை அரண்மணலியாங்காடு பகுதிக்கு வந்தார். அப்போது அவரை ஒரு காரில் வந்த 2 பேர் வழி மறித்தனர். அவர்கள் அந்த பெண்ணை காரில் கடத்திச் சென்றனர். அந்த கார் அங்குள்ள ஒரு தோப்புக்குள் சென்றது. அங்கு கடத்தி சென்ற பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த மர்ம நபர்கள் கடத்தப்பட்ட பெண்ணிடம் இருந்து 2 பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்து சென்று விட்டனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் சத்திரப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் பெண்ணை காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் அதே பகுதியில் வசிக்கும் ரவுத்திரப் பாண்டி மற்றும் ஒருவர் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News