விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
- மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
- காட்டுப்பன்றியின் சீரழிவை தடுக்க தடுப்பு வேலி அமைக்க கடனுதவிவழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. தாசில்தார் வீரபத்திரன் தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை தாசில்தார் வனிதா, மண்டல துணை தாசில்தார் தமிழ் எழிலன், தலைமை நில அளவையர் செந்தில் முன்னிலை வகித்தனர். உழவர் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஜெயரட்சகன் வரவேற்றார். வாடிப்பட்டி யூனியன் அலுவலக சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சிறுமலை பகுதியில் மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்ய பெரியாறு பாசன கால்வாயில் இருந்து கிளை கால்வாய் அமைத்து சாத்தியார் அணை வரை பாசன கால்வாய் அமைக்க வேண்டும். வனத்துறை சார்பில் காட்டுப்பன்றியின் சீரழிவை தடுக்க தடுப்பு வேலி அமைக்க கடனுதவிவழங்க வேண்டும், பாலமேடு சாத்தையாறு அணை சாலையை சீரமைக்க வேண்டும், வாடிப்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களில் அடர்ந்து காடு போல் காட்சியளிக்கும் சீமை கருவேல் மரங்களை அகற்ற வேண்டும், வைகை ஆற்று பகுதியில் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.