உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்த படம்.

கூட்டுறவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-09 15:10 IST   |   Update On 2023-08-09 15:10:00 IST
  • கூட்டுறவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரை

மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு இன்று தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர்கள் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உறுப்பினர் போஸ் தலைமை தாங்கினார். துணை தலைவர் துரைச்சாமி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

கடந்த 5 ஆண்டுகளாக ஊதியமின்றி அல்லல் படும் கூட்டுறவு வீட்டு வசதி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். இதற்காக சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும். கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களை மற்ற சங்கங்களோடு இணைத்து ஊழியர்களுக்கு மாற்று பணி வழங்க வேண்டும். வீட்டு வசதி சங்கத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களில் நலிவுற்ற சங்க பணியாளர்களை நியமிக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணி ஓய்வு பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் பொதுப்பணி மாறுதல் திட்டத்தினை வகைபடுத்த வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News