உள்ளூர் செய்திகள்

செல்போன்- பணம் திருட்டு

Published On 2022-10-01 14:16 IST   |   Update On 2022-10-01 14:16:00 IST
  • அ.தி.மு.க. கூட்டத்தில் புகுந்து செல்போன்- பணம் திருடிய கும்பல் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மற்றும் சிவகாசியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடந்தது.

திருமங்கலம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மற்றும் சிவகாசியில் அ.தி.மு.க. சார்பில் நடந்த கண்டன பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். அவரை திருமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் அக்கட்சியினர் திரண்டு வந்து வரவேற்றனர்.

திருமங்கலம் பகுதியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி கட்சி பிரமுகர்களிடம் மர்ம நபர்கள் 3 செல்போன்கள், மற்றும் ரூ. 35 ஆயிரம் ரொக்கத்தை நைசாக திருடிக் கொண்டு தப்பினர்.இதுதொடர்பாக அச்சம்பட்டியைச் சேர்ந்த சக்தி பாபு என்பவர் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில் கூட்டத்தை பயன்படுத்தி செல்போன், பணம் திருடியது தஞ்சாவூரை சேர்ந்த நீலகண்டன், தேவகோட்டையைச் சேர்ந்த ராகுல் காந்தி என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் இவர்கள் 20-க்கும் மேற்பட்ட வர்கள் தமிழகத்தில் எந்த கட்சி பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன், பணத்தை திருடி வந்தது தெரியவந்தது.

கைதான 2 பேரிட மும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News