உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி 91-வது வார்டு பகுதியில் சி.சி.டி.வி. காமிரா பொருத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

சி.சி.டி.வி. கேமரா பொருத்தி விழிப்புணர்வு

Published On 2023-07-11 08:46 GMT   |   Update On 2023-07-11 08:46 GMT
  • சி.சி.டி.வி. கேமரா பொருத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  • இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆலோசனை வழங்கினார்.

மதுரை

மதுரை மாநகராட்சி 91-வது வார்டுக்கு உட்பட்ட ஓம்சக்தி நகர், வ.உ.சி. தெரு, சேஷாத்திரி தெரு ஆகிய பகுதிகளில் இடம்புரி செல்வ விநாயகர் கோவில் சங்கத்தின் சார்பாக 16 சி.சி.டி.வி. காமிரா பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவனி–யாபுரம் போலீஸ் இன்ஸ் பெக்டர் பார்த்திபன் கலந்து– கொண்டு நிகழ்ச்சி யை துவக்கி வைத்தது பொது –மக்களுக்கு ஆலோச னை வழங்கினார்.

அப்போது அவர் பேசு–கையில், பொதுமக்கள் குற்ற செயல்கள் எதுவும் நடை–பெறாமல் இருக்க இனி வரும் காலங்களில் வீடு தோறும் சி.சி.டி.வி. பொருத் தும் சூழ்நிலை ஏற்படும் என்றும், இது போன்று தெருக்களில் பொதுநல அமைப்புகள் சி.சி.டி.வி. காமிரா பொ ருத்துவதினால் குற்றவாளி களை போலீசார் விரைந்து பிடிப்பதற்கும் குற்ற செயல்கள் நடைபெறா–மல் இருக்கவும் மிக அவ–சியமாக இருக்கிறது.

மேலும் மாணவ, மாண–விகள், பொதுமக்கள் இந்த பகுதிகளில் போதை பொருட்கள் யாரேனும் விற்றால் அல்லது சந்தேகப்ப–டும் படி புதிய நபர்கள் யாரேனும் தெருக்களில் வந்து சென்றால் உடனடி–யாக காவல்துறையிடம் தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ தெரி–விக்க வேண்டும்.

அவ்வாறு தெரியப்ப–டுத்தும் அவர்களின் ரகசி–யங்கள் காக்கப்படும். இதன் மூலம் குற்றச்செயல் புரியும் நபர்களை போலீசார் உடனே கைது செய்து நடவ–டிக்கை எடுக்க உதவியாக இருக்கும் என்று தெரிவித் தார். முன்னதாக நற்பணி மையத்தின் தலைவர் கர்ணா வரவேற்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர்கள் சக்தி மணிகண்டன், பாண்டி மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் சந்திரன், குணசேகரன், மோகன், பாஸ்கரன், பரதன், கண் ணன், சரவணன், பிரக–தீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News