உள்ளூர் செய்திகள்
கைதான 4 பேரையும் படத்தில் காணலாம்.
- கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது செயத்னர்.
- 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ.5 ஆயிரம், இரண்டு செல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கவுண்டன்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் கவுண்டன்பட்டி மயானம் அருகில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் பிடிபட்டனர். அவர்கள் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கார்த்திகேயன் (வயது 25), தேனியை சேர்ந்த சஞ்சய் குமார் (19), முத்து (24) மற்றும் மதுரை மாவட் டம் எம்.கல்லுப்பட் டியை புதியவன் (24) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ.5 ஆயிரம், இரண்டு செல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.