உள்ளூர் செய்திகள்

போலீஸ்காரர் மீது தாக்குதல்: கைதி தற்கொலை மிரட்டல்

Published On 2023-02-20 13:32 IST   |   Update On 2023-02-20 13:32:00 IST
  • போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய கைதி தற்கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தார்.
  • இது தொடர்பாக கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை மத்திய சிறையில் மகேஷ் சண்முகம் என்பவர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். சம்பவத்தன்று மாலை அவர் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கும், சக கைதிக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஜெயில் காவலர்கள் கண்ணன், பாண்டியன் ஆகியோர் மகேஷ் சண்முகத்தை சிறைக்குள் அடைக்க முயன்றனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மகேஷ் சண்முகம், போலீஸ்காரர் கண்ணனை தாக்கினார். மேலும் அவரது சட்டையை கிழித்து கீழே தள்ளிவிட்டாராம்.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மகேஷ் சண்முகம் அடுத்த நாள் மதியம் விசாரணை தொகுதிக்கு சென்றார். அங்கு பணியிலிருந்த சவரத் தொழிலாளியின் கத்தியை பிடுங்கி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக சிறை அதிகாரி பாலகிருஷ்ணன் கரிமேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News