உள்ளூர் செய்திகள்

அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

Published On 2023-09-21 08:23 GMT   |   Update On 2023-09-21 08:23 GMT
  • சோழவந்தானில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
  • ஒன்றிய இளைஞரணி தண்டபாணி நன்றி கூறினார்.

சோழவந்தான்

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சோழவந்தான் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மற்றும் தலைமை கழக பேச்சாளர் இயக்குநர் சக்தி சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்திற்கு வாடிப் பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கி னார். இதில் சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம், மதுரை தெற்கு எஸ்.எஸ். சரவணன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச் சந்திரன், மதுரை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, சோழ வந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் டாக்டர் அசோக் குமார் மற்றும் சோழவந்தான், வாடிப்பட்டி தெற்குஒன்றிய நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞரணி தண்டபாணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News