உள்ளூர் செய்திகள்

பெண் உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2023-04-21 13:51 IST   |   Update On 2023-04-21 13:51:00 IST
  • பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செயது வித்யாபதியை கைது செய்தனர்.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே எஸ்.வி. நத்தம் லட்சுமி புரத்தை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மனைவி நாகரத்தினம் (வயது 37). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நாகரத்தினம் சாம்பிராணி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொ லை செய்து கொண்டார்.

இது குறித்து நாகரத்தினத்தின் தாய் பாண்டியம்மாள் கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் அருகே வேடர் புளியங்கு ளத்தை சேர்ந்தவர் வித்யாபதி (வயது 55). இவரது மனைவி ஆதிலட்சுமி (45). வத்யாபதி சிவில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். நாகர்கோவிலில் வேலை பார்த்து வந்த அவர் வாரத்தில் ஒரு நாள் மட்டும் வீட்டுக்கு வந்து செல்வார்.

இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த ஆதி லட்சுமி கடந்த 19-ந் தேதி இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது சாவுக்கு கணவர் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வித்யாபதியை கைது செய்தனர்.

Tags:    

Similar News