உள்ளூர் செய்திகள்

மத்திய அரசின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் முகாம்

Published On 2023-09-08 14:58 IST   |   Update On 2023-09-08 14:58:00 IST
  • கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன் பங்கேற்பு
  • சிறு வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் பலன்பெற்றனர்

கோவை,

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் சார்பில் பிரதமரின் ஸ்வநிதி என்ற திட்டத்தின் கீழ் சிறு வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு மூலதனக் கடன் வழங்கும் முகாம் கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

முகாமினை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் கடன் பெறுவ தற்கான விண்ணப்பங்கள் பயனாளிகளுக்கு வழ ங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் தாமோதரன், மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரம் மற்றும் சாலையோர வியாபாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News