உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே நிலத்தில் குடியேறும் போராட்டம்

Published On 2023-08-30 09:04 GMT   |   Update On 2023-08-30 09:04 GMT
  • பட்டா வேண்டி 40 வருடங்களாகவே போராடி வருகின்றனர்.
  • வருவாய் துறையினர் உரிய இடத்தை அளவீடு செய்து இதுநாள் வரை தரப்படவில்லை.

கடலூர்:

பண்ருட்டி அருகே அங்கு செட்டிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட புதுநகர் உள்ளது. இங்கு உள்ள ஆதிதிராவிடர் பொதுமக்களுக்கு அரசால் கொடுக்கப்பட்ட இடத்தில் பட்டா வேண்டி 40 வருடங்களாகவே போராடி வருகின்றனர்.கடந்த ஆண்டு காத்திருப்பு போராட்டம், சாலை மறியல், உண்ணாவிரதம் போன்ற பல்வேறு போராட்டம் நடத்தினர். ஆனால் பட்டா வழங்கும் இடத்தை வேறு நபருக்கு விற்பனை செய்து கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் வருவாய் துறையினர் உரிய இடத்தை அளவீடு செய்து இதுநாள் வரை தரப்படவில்லை. இந்நிலையில் இன்று அப்பகுதி பொதுமக்கள் திடீரென அந்த இடத்தில் கும்பலாக சென்று குடி ஏறும் போராட்டம் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News