உள்ளூர் செய்திகள்

பலியான தொழிலாளி முருகன்.

கூலி தொழிலாளி அடித்துக்கொலை; 3 பேர் கைது

Published On 2023-07-28 14:50 IST   |   Update On 2023-07-28 14:50:00 IST
  • முருகன் மற்றும் அவரது மனைவிக்கு இடையே நேற்று தகராறு நடந்துள்ளது.
  • போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.

பேரளம்:

திருவாரூர் மாவட்டம், பேரளம் அடுத்த மானந்தங்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52). விவசாய கூலி தொழிலாளி.

இவரது மனைவி ஜெயந்தி.

இந்நிலையில், முருகன் மற்றும் அவரது மனைவிக்கு இடையே நேற்று தகராறு நடந்துள்ளது.

இதை பார்த்த எதிர்வீட்டை சேர்ந்த ராமையன் (50) என்பவர் முருகனை சமாதானம் செய்துள்ளார்.

அப்போது முருகன், ராமையனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராமையன் மற்றும் அவரது மகன்கள் சாந்தகுமார் (38), சசிகுமார் (40) ஆகியோர் சேர்ந்து முருகனை கட்டையால் தாக்கியுள்ளனர்.

இதில் முருகன் மயக்கம் அடைந்துள்ளார்.

உடனடியாக அவரை திருவாரூர் அரசு மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அனும தித்தனர்.

சிகிச்சை பெற்று வந்த முருகன் பலனின்றி பரிதாப மாக உயிரிழந்தார்.

இதுகுறித்து, முருகனின் மனைவி ஜெயந்தி பேரளம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து முருகனை தாக்கிய ராமையன், சாந்தகுமார், சசிகுமார் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News