உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்- டி.ஐ.ஜி. உத்தரவு

Published On 2022-07-17 14:44 IST   |   Update On 2022-07-17 14:44:00 IST
  • சேலம் மாநகரத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பிரகாஷ், மகராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமனம்.
  • கிருஷ்ணகிரி மாவட்ட குற்ற ஆவண பதிவேடு இன்ஸ்பெக்டர் பழனியப்பன், தர்மபுரி இன்ஸ்பெக்டராக நியமனம்.

கிருஷ்ணகிரி,

ஓசூர் சப்- இன்ஸ்பெக்ட ராக பணியாற்றி பதவி உயர்வு பெற்ற பார்த்திபன், ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ராணி, ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், சேலம் மாநகரத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பிரகாஷ், மகராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், கோவை மாநகரில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சரவணன், குருபரப்பள்ளி சர்க்கிள் இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல கிருஷ்ணகிரி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் இன்ஸ்பெக்டராவும் கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சேலம் மாவட்டம் தலைவாசல் இன்ஸ்பெக்டராகவும், கிருஷ்ணகிரி மாவட்ட குற்ற ஆவண பதிவேடு இன்ஸ்பெக்டர் பழனியப்பன், தர்மபுரி இன்ஸ்பெக்டராகவும், மத்திகிரி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் பாகலூர் இன்ஸ்பெக்டராகவும், ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி, மத்திகிரி இன்ஸ்பெக்டராகவும், சேலம் மாவட்டம் ஏற்காடு இன்ஸ்பெக்டர் ரஜினி, சூளகிரி இன்ஸ்பெக்டராகவும், சேலம் மாவட்டம்வீ ரகனூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டராகவும் பணியிட மாற்றம் செய்து, சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News