உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்பு வழிகாட்டும் ஆலோசனை முகாம்

Published On 2023-04-24 06:25 GMT   |   Update On 2023-04-24 06:25 GMT
  • ஆதிதிராவிட மாணவ, மாணவியர்களுக்கான ஆலோசனை முகாம்
  • கரூர் கலெக்டர் பிரபு சங்கர் அழைப்பு

கரூர்,

ஆதிதிராவிடர் மாணவ, மாணவி யருக்கு தொழில், வேலைவாய்ப்பு வழிகாட்டும் ஆலோசனை முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கரூர் மாவட்ட அரசு பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் ஆதிதிராவிடர் மாணவ, மாணவியரின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் வகையில், அவர்களுக்கு தொழில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் மற்றும் அந்த படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து தன்னார்வ இயக்கத்தின் மூலம் வழிகாட்டும் ஆலோசனை முகாம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி கரூர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 25) கரூர் அரசு கூட்டரங்கில் ஆலோசனை முகாம் நடைபெறும். இதே போல குளித்தலை கோட்டத்துக்கு வரும் 26-ந்தேதி அய்யர்மலை அரசு கலை கல்லுாரி கூட்டரங்கிலும் முகாம் நடைபெற உள்ளது. இதில் ஆதி திராவிட மாணவ, மாணவியர் பங்கேற்று பயன்பெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News