உள்ளூர் செய்திகள்

புதிய பஸ் நிலைய கட்டுமானம் மற்றும் தினசரி சந்தை கட்டிட பணிகளை சபாநாயகர் அப்பாவு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

வள்ளியூரில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை விரைவில் அமைக்கப்படும் -சபாநாயகர் அப்பாவு தகவல்

Published On 2023-10-31 13:43 IST   |   Update On 2023-10-31 13:43:00 IST
  • ஜனவரி மாதத்திற்கு பின்னர் தினசரி சந்தை திறக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
  • தினசரி சந்தை முன்பு கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

வள்ளியூர்:

வள்ளியூரில் அமைந் துள்ள பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் சிலைக்கு ஜெயந்தியை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சபாநாயகர் அப்பாவு தமிழக அரசு நிதியில் கட்டப்பட்டு வரும் ரூ.12.5 கோடி மதிப்பீட்டிலான புதிய பஸ் நிலையம் மற்றும் ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் தினசரி சந்தை கட்டு மான பணிகளையும் ஆய்வு செய்தார்.

மேலும் விரைவில் பணிகளை முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக் கொண்டார். பின்னர் நிருபர்களிடம் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-

ரூ.4.5 கோடியில் கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஜனவரி மாதத்திற்கு பின்னர் தினசரி சந்தை திறக்கப்படும். இதில் வாகனங்கள் முன்பு செல்வ தற்கான வளைவுகள் அமைக்கப்பட்டு வருகின் றன.

மேலும் வள்ளியூர் பேரூராட்சி தீர்மானத்தின் படி சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்க அரசின் ஒப்புதல் பெறப்பட உள்ளது. விரைவில் தினசரி சந்தை முன்பு கலைஞர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும். அதனை முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓராண்டுக்குள் பஸ் நிலைய கட்டுமான பணிகளும் நிறைவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி அலுவலர்கள், கவுன் சிலர்கள், தி.மு.க. பிரமு கர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News