உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழியில் ரவுடியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

Published On 2023-08-13 06:40 GMT   |   Update On 2023-08-13 06:40 GMT
  • ஆத்திரம் அடைத்த நாகராஜன் வீட்டிலிருந்த வெட்டு கத்தியை எடுத்து வந்து ஜான் அனீஸ்ராஜாவை வெட்டினார்.
  • ஜான் அனீஸ்ரா ஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

நாகர்கோவில் :

ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகரா மன்புதூர் யோகீஸ்வரர் காலனியை சேர்ந்தவர் கருணாகரன். இவர் அந்த பகுதியில் சவுண்ட் சர்வீஸ் வைத்துள்ளார். இவர் ஒலிபெருக்கியை சோதனை செய்யும்போது அதிகம சத்தம் கேட்பதால் இவருக் கும், அதே பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதை கருணாகரன் தனது மகன் செல்வத்திடம் கூறியுள்ளார். இதையடுத்து செல்வம் தனது நண்பர் அகஸ்தியர் காலனியை சேர்ந்த ஜான் அனீஸ்ராஜாவுடன் சென்று கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரம் அடைத்த நாகராஜன் வீட்டிலிருந்த வெட்டு கத்தியை எடுத்து வந்து ஜான் அனீஸ்ராஜாவை வெட்டினார். இதில் படு காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஜான் அனீஸ்ரா ஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீ சார் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து நாகராஜன் (வயது 25) மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நாகராஜன் போலீசில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஜான் அனீஸ் ராஜா பெயர் ரவுடிகள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News