உள்ளூர் செய்திகள்

தோவாளையில் கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசுகள்

Published On 2023-08-29 06:57 GMT   |   Update On 2023-08-29 06:57 GMT
  • தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. வழங்கினார்
  • 24 அணிகள் கலந்துகொண்ட மாபெரும் கிரிக்கெட் போட்டி கடந்த 3 மாதங்களாக நடந்தது

ஆரல்வாய்மொழி :

தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 24 அணிகள் கலந்துகொண்ட மாபெரும் கிரிக்கெட் போட்டி கடந்த 3 மாதங்களாக நடந்தது. இந்நிலையில் நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன் தலைமை தாங்கினார். விழாவில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவரும், நகர அ.தி.மு.க. செயலாளருமான முத்துக்குமார், தோவாளை ஊர் தலைவர்களாக கேசவமுருகன், வேலாயுதம், பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, தோவாளை ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகி பகவதியப்பன், ஆசிரியர் சேகர் மற்றும் பொதுமக்கள் ஊர் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டது. சக்தி மகளிர் டிரஸ்ட், பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் இணைந்து போட்டியை நடத்தின.

Tags:    

Similar News