உள்ளூர் செய்திகள்

ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சாமிக்கு ஓணவில் படைக்கும் நிகழ்ச்சி

Published On 2023-08-30 07:00 GMT   |   Update On 2023-08-30 07:00 GMT
  • ஓண வில்கள் சுவாமி முன்பு சமர்பிக்கப்பட்டது
  • அர்ச்சகர்கள் ஓணவில்களை ஏந்தி ஸ்ரீபலி விக்கிரகங்கள் அருகில் சென்றனர்

திருவட்டார் :

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஓணப்பண்டிகை நாளில் கேரளா முறைப்படி ஓணவில் பெருமாளுக்கு சமர்ப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டு இந்நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. ஓண வில்கள் சுவாமி முன்பு சமர்பிக்கப்பட்டது. பின்னர் அர்ச்சகர்கள் ஓணவில்களை ஏந்தி ஸ்ரீபலி விக்கிரகங்கள் அருகில் சென்றனர். இதையடுத்து ஸ்ரீ பலி விக்கிரகங்களுடன் மேள தாளம் முழங்க ஓணவில்களுடன் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தனர்.

தொடர்ந்து ஓணவில்கள் கிருஷ்ணசாமி சன்னதியிலும், ஆதிகேசவப்பெருமாள் சன்னதியிலும் வைக்கப்பட்டது. பின்னர் தீபாராதனை நடந்தது. இந்த பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன் குமார் செய்திருந்தார்.

Tags:    

Similar News