உள்ளூர் செய்திகள்

தக்கலை அருகே கணவர் மாயம்; மனைவி புகார்

Published On 2022-11-24 07:45 GMT   |   Update On 2022-11-24 07:45 GMT
  • மேலப்பாளையத்தில் ஓட்டல் நடத்தி வந்த அய்யப்பன் (வயது 42) என்பவருக்கும் திருமணம் நடந்தது.
  • செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டி ருந்தது.இதுகுறித்து அவரது மனைவி சாலினி, தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

கன்னியாகுமரி:

தக்கலை அருகே உள்ள வெட்டிகோணம் பகுதியை சேர்ந்தவர் சாலினி. இவருக்கும் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் ஓட்டல் நடத்தி வந்த அய்யப்பன் (வயது 42) என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் அய்யப்பன், கடந்த 15-ந்தேதி தனது மனைவி சாலினியுடன் வெட்டி கோணத்தில் வந்து தங்கினார். மறுநாள் வேலைக்கு செல்வதாக கூறி சென்ற அய்யப்பன் இரவில் வீடு திரும்பவில்லை.

அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டி ருந்தது.இதுகுறித்து அவரது மனைவி சாலினி, தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யப்பனை தேடி வரு கின்றனர்.

Tags:    

Similar News