உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி 7-வது வார்டில் ரூ.10 லட்சம் மதிப்பில் தார் சாலை

Published On 2023-07-15 08:50 GMT   |   Update On 2023-07-15 08:50 GMT
  • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
  • துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் மாநகராட்சியின் 7-வது வார்டுக்குட்பட்ட தெலுங்கு செட்டி தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்படுகிறது. இந்தப் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர்கள் ஜவகர், மாமன்ற உறுப்பினர்கள் மேரி ஜெனட் விஜிலா, ஜெயவிக்ரமன், கவுசிகி, தொழில் நுட்ப அலுவலர் ரவி, பகுதி செயலாளர் சேக் மீரான், இளைஞர் அணி அகஸ்தீசன், வேல்முருகன் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News