உள்ளூர் செய்திகள்

துடியலூர் அருகே உதவிக்கு அழைத்து ஐ.டி. பெண் ஊழியரை பலாத்காரம் செய்த டிராவல்ஸ் ஊழியர்

Published On 2023-07-25 09:56 GMT   |   Update On 2023-07-25 09:56 GMT
  • இன்ஸ்டாகிராம் மூலமாக துடியலூர் அருகே டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சக்தி தங்கவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
  • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

கோவை,

கோவையை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

நான் கோவை பீளமேட்டில் உள்ள தொழில்நுட்ப பூங்காவில் ஐ.டி. ஊழியராக வேலை பார்த்து வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக துடியலூர் அருகே உள்ள பன்னிமடையை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சக்தி தங்கவேல் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று எங்களது காதலை வளர்த்து வந்தோம்.

கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி என்னை தொடர்பு கொண்ட சக்தி தங்கவேல் தனக்கு காய்ச்சல் அடிப்பதாகவும், உதவி செய்ய வருமாறும் அழைத்தார்.

இதனையடுத்து நான் அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கு அவர் தனியாக இருந்தார். இதனை சாதகமாக பயன்படுத்திய சக்தி தங்கவேல் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து என்னை அவர் பலாத்காரம் செய்ததால் நான் 2 மாத கர்ப்பமானேன். இதுகுறித்து நான் அவரிடம் தெரிவி த்தேன். அதற்கு அவர் கருவை கலைத்து விடு என்றார். கருவை கலைக்க வில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

தற்போது அவர் என்னுடன் பேசுவதையும், பழகுவ தையும் தவிர்த்து விட்டார். எனவே திருமணம் செய்வ தாக ஆசைவார்த்தை கூறி என்னை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய சக்தி தங்கவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சக்தி தங்கவேலை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News