ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
- சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆடி மாதத்தில் மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடை பெறுவது வழக்கம். அம்மனுக்கு பொங்கல் வைத்து பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை யொட்டி நேற்று மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
கிருஷ்ணகிரி ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில் சாமிக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதே போல ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், அபிஷேகம சிறப்பு பூஜைகள் செய்து சிறப்பு அலங்காரத்திலும், ஜக்கப்பன்நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு அபிஷேகமும், அலங்கா ரமும் நடந்தன. அக்ரஹா ரத்தில் உள்ள அம்பா பவானி கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டது. பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினர்.
இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஆடி மாதத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை வழக்கம் போல ஆடி வெள்ளி அன்று பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.