உள்ளூர் செய்திகள்

இந்திய காலணி தொழில்களின் கூட்டமைப்பு சார்பில் இந்திய சர்வதேச காலணி கண்காட்சி

Published On 2023-07-31 14:46 IST   |   Update On 2023-07-31 14:46:00 IST
  • கண்காட்சியை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ராணே தொடங்கி வைத்தார்.
  • நிறைவு விழாவில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் பங்கேற்கிறார்.

கோவை,

இந்திய காலணி தொழில்களின் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் 7-வது ஆண்டாக 'இந்திய சர்வதேச காலணி கண்காட்சி 2023 நடந்தது. இந்த கண்காட்சியை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ராணே தொடங்கி வைத்தார்.

கண்காட்சியில், பல்வேறு புதிய தயாரிப்புகள், தொழில் அதிபர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் அமர்வுகள், தொழில்துறைக்கான கருத்தரங்குகள் மற்றும் பிரத்யேக பேஷன் ஷோ இடம் பெற்றன.

கண்காட்சி துவக்க விழாவில் வாக்கரூ இன்டர்நேஷனல், விகேசி புட்வேர் மற்றும் பிற காலணி துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து இந்திய காலணி தொழில்களின் கூட்டமைப்பு தலைவர் நவுஷாத் கூறியதாவது:-

இந்திய உற்பத்தியாளர்களுக்கும் சர்வதேச வாங்குபவர்களுக்கும் இடையே வலுவான உறவுகளை வளர்ப்பதில் இந்த கண்காட்சி முக்கிய பங்கு வகிக்கிறது.

அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் காலணித் துறையின் எதிர்காலத்தை வரையறுக்கும் நிலையான நடைமுறைகள் மற்றும் இந்திய காலணிகளை உலகளவில் மேம்படுத்துதல் ஆகியவை இந்த ஆண்டு கண்காட்சியில் முக்கியத்துவம் பெறுகின்றன என்றார்.

கண்காட்சியில் இந்திய காலணிகளுக்கான வளர்ச்சி வாய்ப்புகள், சமீபத்திய போக்குகள் மற்றும் மேம்பாடுகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 3 நாள் நடந்த கண்காட்சி இன்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு விழாவில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் பங்கேற்கிறார்.

Tags:    

Similar News