உள்ளூர் செய்திகள்

திருவாரூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூரில், பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-24 09:50 GMT   |   Update On 2023-07-24 09:50 GMT
  • மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
  • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

திருவாரூர்:

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு தடுக்க வேண்டும், அத்தியாவசியப் பொருட்கள், மின் கட்டணம், சொத்து வரி, வாகனப் பதிவுக் கட்டணம், பத்திரப் பதிவுக் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வுகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் பாஜகவினர் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் நெய்விளக்கு தொகுப்பு பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக நகர தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின் , விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், உள்ளிட்ட கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் பொழுது தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு மாலை அணிவித்து, ஊதுபத்தி கொளுத்தி பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ க மாவட்டத் தலைவர் பாஸ்கர், நகர துணை தலைவர் முறுக்கு பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News