உள்ளூர் செய்திகள்

 மாணவிகள் செல்போன் மூலம் தங்களது தேர்ச்சி விவரத்தை பார்வையிட்ட காட்சி. 

திருப்பூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.57 சதவீதம் பேர் தேர்ச்சி: 10-ம் வகுப்பில் 88.46 சதவீதம் பேர் தேர்ச்சி

Published On 2022-06-20 11:33 GMT   |   Update On 2022-06-20 12:03 GMT
  • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 358 பள்ளிகளை சேர்ந்த 29 ஆயிரத்து 631 மாணவ, மாணவிகள் எழுதினர்.
  • 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 218 பள்ளிகளை சேர்ந்த 24 ஆயிரத்து 395 மாணவ, மாணவிகள் எழுதினர்.

திருப்பூர் :

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த கல்வி ஆண்டில் பள்ளி மற்றும் கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்டு கிடந்தன. இதன் பிறகு கொரோனா தொற்று குறைய தொடங்கிய பிறகு படிப்படியாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதன் பிறகு பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 358 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 804 மாணவர்கள், 14 ஆயிரத்து 827 மாணவிகள் என மொத்தம் 29 ஆயிரத்து 631 பேர் எழுதினர். இதில் 12 ஆயிரத்து 459 மாணவர்களும், 13 ஆயிரத்து 752 மாணவிகளும் என மொத்தம் 26 ஆயிரத்து 212 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 84.16 சதவீதம், மாணவிகள் 92.76 சதவீதம் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.46 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதுபோல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை திருப்பூர் மாவட்டம் முழுவதும் 218 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 269 மாணவர்களும், 13 ஆயிரத்து 126 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 395 பேர் எழுதினர். இதில் 10 ஆயிரத்து 726 மாணவர்களும், 12 ஆயிரத்து 833 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 559 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 95.18 சதவீதமும், மாணவிகள் 97.77 சதவீதமும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் உள்பட பலரும் பாராட்டினர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 30-வது இடமும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 7-வது இடமும் பிடித்துள்ளது.

Tags:    

Similar News