கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை வீழ்ச்சி
- கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை குறைந்துள்ளது.
- வாரந்தோறும் ஞாயிற் றுக்கிழமை அன்று அசைவ பிரியர்கள் மீன் மற்றும் இறைச்சிகள் வாங்குவது வழக்கம்.
கடலூர்:
வங்க கடலில் மீன் வளத்தை பெருக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை கடலில் மீன் பிடிக்க அரசு தடை விதித்து வருகிறது. இந்த காலகட்டத்தில் மீன்கள் இனப்பெருக்கம் நடைபெறும் என்பதால் விசைப்படகுகள் நடுக்கட லுக்கு செல்ல கூடாது என்று உத்தரவு பிறப் பிக்கப்பட்டது. அதன்படி மீன் பிடி தடைகாலம் ஜூன் 15-ந் தேதி முடிந்தவு டன் மறுநாளில் இருந்து கடலூரை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகு களில் கடலுக்கு சென்றனர்.
அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து விட்டு கடந்த 19-ந் தேதி கரை திரும்பினர். ஆனால், போதுமான மீன்கள் சிக்கவில்லை. இதன் காரணமாக கடந்த வாரம் மீன் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வாரந்தோறும் ஞாயிற் றுக்கிழமை அன்று அசைவ பிரியர்கள் மீன் மற்றும் இறைச்சிகள் வாங்குவது வழக்கம். அதன்படி மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் இன்று காலை கடலூர் துறைமுகம் பகுதிக்கு சென்றனர். ஆனால், மீன்கள் வரத்து ஓரளவு இருந்தது. இருந்தாலும் மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்தது. இன்று விற்பனை விலை கிேலாவில் வருமாறு:- வஞ்சரம் - ரூ.880, வவ்வால் - ரூ.600, பாறை - ரூ.350, கடல் விரால் - ரூ.600, வெள்ளை கிழங்கா - ரூ.400, நெத்திலி - ரூ.150, இறால் - ரூ.500, பண்ணி சாத்தான் - ரூ.400. இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், இன்று கிருத்திகை மற்றும் பிரதோஷம் ஆகும். 28-ந் தேதி அமாவாசை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் உள்ளதால் மீன்கள் விலை குறைந்துள்ளது என்றார்.