நீலகிரியில் பலாப்பழங்களை ருசிக்க வரும் யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம்
- வாழைத்தோட்டங்களை சேதப்படுத்தி அட்டூழியம்
- தோட்டத்தில் நுழையாததால் அங்கு விளைந்து இருந்த மேரக்காய்கள் தப்பின
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குஞ்சப்பனை, கருக்கியூர், கிலிப்பி, செம்னாரை ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பலாப்பழ சீசன் நிலவுகிறது. இதனால் அங்கு உள்ள மரங்களில் பலாப்பழங்கள் பழுத்து தொங்கு கின்றன.
எனவே சமவெளி பகுதிகளில் உள்ள காட்டுயானைகள் பலாப்பழங்களை பிடுங்கி தின்பதற்காக ஊருக்குள் படையெடுத்து வருகின்றன. இவை அந்த பகுதியில் தற்போது நிரந்தரமாக முகாமிட்டு உள்ளன. அப்போது ஒருசில நேரங்களில் காட்டு யானைகள் அருகில் உள்ள கிராம பகுதிகளிலும் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
கோத்தகிரி அருகே உள்ள கொணவக்கரை, முல்லை நகர் பகுதியில் விவசாயி பிரவீன் என்பவர் சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் மேரக்காய் பயிரிட்டு உள்ளார். மேலும் தோட் டத்தை ஒட்டி 50-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் சாகுபடி செய்து இருந்தார்.
இந்த நிலையில் அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் காட்டுயானைகள் வந்தன. அப்போது அவை வாழை மரங்களை தின்றும், சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்தன. ஆனால் மேரக்காய் தோட்டத்திற்குள் நுழையவில்லை. இதனால் அங்கு விளைந்து இருந்த மேரக்காய்கள் தப்பின.
இதுகுறித்து விவசாயி பிரவீன் கூறுகையில், மேரக்காய் தோட்டத்திற்குள் காட்டுயானைகள் புகுந்து இருந்தால் அறுவடைக்கு தயாரான மேரக்காய்கள் வீணாகி, சுமார் ரூ.8 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டு இருக்கும். காட்டுயானைகள் மீண்டும் வராமல் தடுக்க, மீதமுள்ள வாழை மரங் களை வெட்டி சற்று தொலைவில் உள்ள சாலையில் போட்டு உள்ளோம். ஊருக்குள் புகுந்து அட்டூழியம் செய்யும் காட்டு யானைகளை தடுக்க வனத்துறையினர் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.