உள்ளூர் செய்திகள்

சேலத்தில் பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபர் கைது

Published On 2022-11-19 15:46 IST   |   Update On 2022-11-19 15:46:00 IST
  • குகை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
  • இவரை கடந்த 7-ந் தேதி அதே பகுதியைச் சேர்ந்த அங்குராஜ் மகன் சூர்யா (வயது 21) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

சேலம்:

சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள், இவர் குகை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரை கடந்த 7-ந் தேதி அதே பகுதியைச் சேர்ந்த அங்குராஜ் மகன் சூர்யா (வயது 21) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியை மீட்டதுடன் சூர்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News