உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே மனைவி சமைக்காததால் கணவன் தற்கொலை

Published On 2022-07-17 08:34 GMT   |   Update On 2022-07-17 08:34 GMT
  • கடலூர் அருகே மனைவி சமைக்காததால் கணவன் தற்கொலை செய்துகொண்டார்.
  • கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது.

கடலூர்:

கடலூர் அருகே அப்பியம் பேட்டை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 56). விவசாயி. இவரது மனைவி சுந்தராம்பாள் (வயது 52). சம்பவத்தன்று விவசாயி ஜெயபால் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து சாப்பாடு கேட்டுள்ளார். அப்போது சுந்தராம்பாள் சாப்பாடு செய்யவில்லை. இதனால் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த ஜெயபால் தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்கு போட்டு இறந்தார். இதனை தொடர்ந்து இவரது உடலை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News