உள்ளூர் செய்திகள்

ஓசூர் எம்.ஜி.ஆர்.கல்லூரி பயோடெக் துறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published On 2022-12-03 09:59 GMT   |   Update On 2022-12-03 09:59 GMT
  • ஆய்வு உபகரணங்கள் பற்றிய பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளன.
  • எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி, உயிர்த்தொழில் நுட்பவியல் துறைத்தலைவர் நீதிராஜன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ஓசூர்,

ஒசூரில் உள்ள எம்.ஜி.ஆர். கல்லூரியும், பெங்களுரு அரசு உதவிபெறும் ஐ.பி.ஏ.பி. நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளது.

இதன் மூலம், மாணவர்கள் அந்த நிறுவனத்திற்குச் சென்று உயிர்த்தகவலியல் துறை, உயிர்த்தொழில் நுட்பவியல் துறை, சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்ளவும், பயிற்சி முடிந்ததும் வேலைவாய்ப்பு கிடைக்கும் நோக்கத்துடன் அந்நிறுவனத்தின் இயக்குநருடன் ஒப்பந்தமிடப்பட்டது.

மேலும், பெங்களுரு 'சேன்ஜீன் பயோடெக்' நிறுவன ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாணவர்கள் சமகால ஆய்வு, ஆய்வு உபகரணங்கள் பற்றிய பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

முன்னாள் துணைவேந்தரும், அதியமான் கல்விக்குழும ஆலோசகருமான முத்துச்செழியன் முன்னிலையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், நிறுவன தலைவர் பிரசாத், எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி, உயிர்த்தொழில் நுட்பவியல் துறைத்தலைவர் நீதிராஜன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

Tags:    

Similar News